0

வாசிக்க சில நூல்கள் | ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்

09-06-25 09:21 AM By swasambookart

படைப்புச் சுதந்திரம் விலக்கப்பட்ட கனியா?

துணிச்சல்காரி | ஈரோடு சர்மிளா, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

நம் குழந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகள் மாணவி நிலாவுக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுமியர் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல்ரீதியில் பாதுகாப்பற்ற தொடுகைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை கூறுகிறது. பொதுவாகப் பெரியவர்களைப் பயத்துடன் அணுக வேண்டும் என்கிற கருத்துக்கு மாறாக, யார் தவறாக நடந்துகொண்டாலும் அதை அந்த இடத்திலேயே எதிர்க்க வேண்டும் என்கிறது இந்த இளையோர் நாவல்.


ன் அப்பாவின் டிராகன் | ஞா.கலையரசி, ஊருணி வாசகர் வட்டம், தொடர்புக்கு: 89393 87295

இன்றைய குழந்தைகள் காட்சி ஊடகத்தை அதிகமாகவே சார்ந்திருக்கிறார்கள். அதிலும் பரவலாக விளம்பரப்படுத்தப்படும் படைப்புகளையே பார்க் கிறார்கள். அதற்கு மாறாக, உலகின் சிறந்த 13 சிறார் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் குறித்த அறி முகத்தை எழுதி யிருக்கிறார் ஆசிரியர்.


மேலே மேலே | ச.மாலதி, சாரல் பதிப்பகம், தொடர்புக்கு: 94891 59487

அறிவியலை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அமைந்துள்ளன. அடிப்படையில் அறிவியல் ஆசிரியரான ச.மாலதி, வகுப்பறையில் கதை சொல்லிப் பாடம் நடத்துபவர். இந்தத் தொகுப்பில் அறிவியல் கோட்பாடுகளைக் கதைகளாகத் தந்துள்ளார்.

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன | தேனி சுந்தர், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332424

ஆசிரியரான தேனி சுந்தர், தன் குழந்தைகள் டார்வின், புகழ்மதியுடன் மேற்கொண்ட சுவாரசியமான கலந்துரையாடல்கள், கேள்விகள், பார்வைகளைத் தந்துள்ளார். அவரது அடையாளமான இந்தப் புதிய கலந்துரையாடல் எழுத்து வடிவம், இந்த நூலையும் கவனம்மிக்க ஒன்றாக்குகிறது.

ஆமை அத்தை ஆமை அத்தை | கார்த்திகா கவின் குமார், ஊருணி வாசகர் வட்டம், தொடர்புக்கு: 9962104614

இன்றைய குழந்தை களுக்குக் கதை சொல்ல, கதை எழுத பலர் இருந்தாலும் சிறார் பாடல்கள் குறைவாகவே வருகின்றன. அந்த வகையில் தேவை அதிகமுள்ள இந்த வகைமைக்கு, குறைந்த வரிகள், எளிய அம்சங்கள் கொண்ட சிறார் பாடல்களைத் தந்திருக்கிறார் கார்த்திகா கவின்குமார்.

வெப்பம் | சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044-26359906

காலநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்ற பிரச் சினைகள் தமிழில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்த நூலில் அந்தச் சிக்கல்களைக் கதை வடிவில் பெரிய குழந்தைகளுக்குச் சொல்ல முயன்றுள்ளார் ஆசிரியர்.

ரோஸியும் வெள்ளையம்மாளும் | சரிதா ஜோ, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24330024

ரோஸி என்கிற நாயும் வெள்ளையம்மாள் என்கிற பூனையும் ஒன்றின் மீது மற்றொன்று அன்புடன் வாழ்கின்றன. குழந்தைகளுக்கும் இந்தச் செல்லப்பிராணிகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிய குறுநாவல் இது.

சின்னஞ்சிறு பெண் | லூயிசா மே ஆல்காட், தமிழில்: சுகுமாரன், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இளையோர் நாவல் தமிழுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டு இளம்பெண்களின் ஆதர்சமாக விளங்கிய நாவல் இது. நான்கு சகோதரிகளின் குழந்தைப் பருவம் முதல் இளம் வயது வரையிலான வாழ்க்கையை உணர்ச்சி ததும்பக் கூறுகிறது.

பண்ட்டியின் சூரியத் தாத்தா | புஷ்பா அந்தாணி, இந்தி வழித் தமிழில்: பெ.சரஸ்வதி, தொடர்புக்கு: 044-24311741

குஜராத்தி மொழிக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்ற இந்தக் கதைத் தொகுப்பு, குஜராத்தியிலிருந்து இந்தி வழியாகத் தமிழுக்கு வந்துள்ளது. இயற்கை அம்சங்களைக் கொண்ட சிறார் கதைகள் இந்தத் தொகுப்பில் அதிகம் உள்ளன.

நகரும் மாயவீடு | வே.சங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

குரங்காட்டியிடம் இருந்து தப்பிக்கும் ஒரு குரங்கு, கூரைவீட்டில் தஞ்ச மடைகிறது. அது செய்யும் ஒரு விஷயத்தால், அந்தக் கூரைவீடு நகரத் தொடங்குகிறது. அந்த வீட்டில் சில உயிரினங்கள் வசிக்கின்றன. நகரும் அந்த மாயவீடு அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. அந்தக் குரங்கும், வீடும் கடைசியில் என்னவாக மாறுகின்றன என்பதே இந்தக் கதை.

swasambookart

Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.