
சொந்த வீடு, சொந்த நிலம் என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. செலவுகளை மிச்சம் பிடித்து, சிறுகச் சிறுகச் சேமித்து, தனக்கென ஒரு சொந்த இடம் வாங்கி அதில் குடியேறுவதன் சந்தோஷம் அளவிட முடியாதது. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு, சொந்த இடம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. சட்டச் சிக்கல்கள், வாரிசுப் பிரச்சினை, வில்லங்கம் உள்ள நிலங்களையோ, அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களையோ, கட்டடங்களையோ தவறான வழிகாட்டுதலின்படி வாங்கிவிட்டு மனநிம்மதியை இழக்கிறார்கள். இனி அந்தக் கவலை வேண்டாம். நீங்கள் நிலமோ கட்டடமோ வாங்கும்போது கவனிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய பல முக்கிய வழிமுறைகளையும் அரசாங்க விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். எளிமையாகவும் சட்ட ரீதியாகவும் நீங்கள் சொத்துகளை வாங்குவதற்குச் சரியான பாதையைக் காட்டும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. Own house, own land is a lifelong dream of most people. The joy of saving expenses, saving little by little, buying a place of your own and settling down in it is immeasurable.
₹150.00
Customize
N.Gopalakrishnan | நா.கோபாலகிருஷ்ணன்
Swasam Publications Private Limited
112
1st Edition
Finance | நிதி